ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் மலைக்கிராம மக்களுக்கு அதிமுக சார்பில், 2000 பேருக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மலைக்கிராம மக்களுக்கு அரிசி வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மலைக் கிராமங்கள் உட்பட அனைத்து பகுதியிலுள்ள மாணவர்களையும் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று தேர்வு முடிந்ததும் மீண்டும் அவர்கள் இருப்பிடத்திற்கு கொண்டு சென்றுவிட பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.