கரோனோ வைரஸ் பரவுவதைத் தடுத்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்திட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு நாள்தோறும் புகார் கொடுத்திடவும், கோரிக்கை மனுக்கள் வழங்கிடவும் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் அலுவலக வளாகத்தில் காவல்துறை அலுவலர்கள், காவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அவர்களது கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து, அலுவலகத்திற்குள் நுழையும் முன்னும், வெளியே செல்பவர்களும் தங்களது கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.