ஈரோடு:அந்தியூரில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை கூடுவது வழக்கம். அந்தியூர், பவானி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் பசு, எருமை மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட மாட்டுச் சந்தையில் நேற்று வியாபாரம் படுஜோராக நடைபெற்றது. பசு, எருமைக் கன்றுகள் என 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.