தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 17, 2020, 3:34 PM IST

ETV Bharat / state

இலங்கை அகதிகள் முகாமில் மாநில அளவிலான கபடிப் போட்டி

ஈரோடு: பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் மாநில அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது.

kabadi sports
kabadi sports

ஈரோடு மாவட்டம், அமெச்சூர் கபடிக் கழகம் சார்பில், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் மாநில அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இலங்கை அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அணிகளும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 அணிகளும் பங்கேற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வண்ணத்துப்பூச்சி அணி அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது.வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக்கோப்பை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இலங்கை அகதிகள் முகாமில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதுபோன்ற கபடிப் போட்டிகள் நடத்தப்படுவது ஊக்கத்தை அளிப்பதாக இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இலங்கை அகதிகள் முகாமில் மாநில அளவிலான கபடி போட்டி

இதையும் படிங்க:போராட்டக் களமான வண்ணாரப்பேட்டை - சிஏஏவை எதிர்த்து இங்கும் ஒரு ஷாகீன் பாக்!

ABOUT THE AUTHOR

...view details