தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல ரவுடி வெட்டி படுகொலை; 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

ஈரோடு: ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரகலாதன் என்ற ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் ரவுடியை துரத்தி துரத்து வெட்டி கொலை

By

Published : Mar 30, 2019, 8:58 AM IST

அசோகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகலாதன். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவரை நேற்றிரவு ஐந்து பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று அரிவாளுடன் துரத்திச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருங்கல்பாளையம் காவல்துறையினர், பிரகலாதனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரபல ரவுடி வெட்டி படுகொலை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details