தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் கரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது! - A coronavirus positive woman has given birth to a 'healthy' baby boy at Erode

ஈரோடு: கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஈரோட்டில் கரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
ஈரோட்டில் கரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

By

Published : Apr 12, 2020, 9:55 PM IST

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று பரவல் உலக நாடுகளை ஆட்கொண்டுள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கில்லை. இந்தியாவில் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆயிரத்து 75 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60 பேர் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் இருவர் நிறைமாத கர்ப்பிணிகளாக இருந்தனர்.

இந்நிலையில் ஒரு கர்ப்பிணிக்கு இன்று காலையில் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த பெண்ணிற்கு அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். ஆண் குழந்தை மிக ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரணப் பொருள்கள் வழங்கத் தடை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details