தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டின் கொடிவேரி நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலாப் பயணிகள் - Tourists at Kodiveri Dam

ஈரோடு அருகே கொடிவேரி அணையில் தொடர் விடுமுறையினையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிபோல் கொட்டும் நீர் வீழ்ச்சியில் உற்சாக குளியலிட்டு தங்கள் குடும்பங்களுடன் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.

ஈரோட்டின் கொடிவேரி நீர்வீழ்ச்சியில்! அனல் பறக்கும் கோடையில் ஆனந்த குளியல்...
ஈரோட்டின் கொடிவேரி நீர்வீழ்ச்சியில்! அனல் பறக்கும் கோடையில் ஆனந்த குளியல்...

By

Published : Jan 1, 2023, 10:35 PM IST

ஈரோட்டின் கொடிவேரி நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலாப் பயணிகள்

ஈரோடு: இன்று ஆங்கிலப் புத்தாண்டையொட்டியும், பள்ளிகளுக்கு தொடர்விடுமுறை என்பதாலும் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கரோனா தொற்று மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொடிவேரி அணை பாதி நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகளின் வரவு சற்று குறைந்த அளவு காணப்பட்டது.

தற்போது தடை ஏதும் இல்லாத நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்ற அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதாலும், தொடர்விடுமுறை காரணமாகவும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காலை முதலே கொடிவேரி அணைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் அணையில் அருவிபோல் கொட்டும் நீரில் தங்கள் குடும்பத்துடன் உற்சாக குளியலிட்டும், கடற்கரை போல அமைந்துள்ள மணலில் அமர்ந்து அங்கு விற்கப்படும் பொறித்த மீன்களை வாங்கி உண்டும் மகிழ்ந்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் வருகின்றனர்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கொடிவேரி அணைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகையையொட்டி அணையை சுற்றிலும் கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:புத்தாண்டை கொண்டாட கடலூர் சில்வர் கடற்கரையில் குவிந்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details