ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், எலத்தூரில் குடிமராமத்துப் பணியின் மூலம் தூர்வாரப்படும் குளத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதத் தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டடியல் பெறப்பட்டப் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும்.
மதிப்பெண் பட்டியல் குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. சூழ்நிலையைப் பொறுத்து பருவத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்" எனத் தெரிவித்தார்.