தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதரவற்ற முதியவருக்கு புதுவாழ்வு தந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! - சத்தியமங்கலம்

ஈரோடு: சத்தியமங்கம் தாளவாடி பகுதியில் சுற்றித்திரிந்த ஆதவற்ற மனநோயாளி ஒருவருக்கு புது வாழ்வு அமைத்துத் தந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நான்கு பேரை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

108 workers offers new life to a penurious old man

By

Published : May 12, 2019, 10:03 AM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில் 65 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட ஒருவர் கிழிந்த உடை, தாடியுடன் கடந்த இரண்டு மாதமாக ஆதரவற்று சுற்றித்திரிந்துள்ளார்.

அந்த நபர் குறித்து யாரும் கண்டுகொள்ளாத நிலையில், இது குறித்து தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குரு, அந்தோணிராஜ், இளையராஜா, நாகராஜ் ஆகியோர் அந்த முதியவரைச் சந்தித்தனர்.

பின்னர், அவரை அழைத்துச் சென்று கிழிந்த உடைகளைக் களைந்து, குளிக்கவைத்து, புதிய உடைகள் அணிவித்து மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது, அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ஆதரவற்ற முதியவருக்கு புதுவாழ்வு தந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
மேலும், அவரது மேல் சிகிச்சைக்காகவும் அந்த நால்வரும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மனிதாபிமான செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details