திண்டுக்கல் நாகல்நகர் பகுதியைச் சேர்ந்த ரம்யா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் உடன் பணிபுரிந்துவந்த திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அசோக்கும் காதலித்துள்ளனர்.
இந்நிலையில் இருவீட்டாரும் பேசி திருமணம் செய்து வைப்பதாக முடிவெடுத்து திருமணத்துக்கான தேதியும் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று அசோக் குடும்பத்தார் திருமணத்திற்கு வரவில்லை. இதனையடுத்து அசோக்கின் சித்தி ஏற்பாட்டில் சேலத்தில் ரம்யாவுக்கும் அசோக்குக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர், சென்னையில் வசித்து வந்துள்ளனர்.
அசோக்கின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகக்கூறி அவரை சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் அசோக் உடன் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு அசோக்கின் குடும்பத்தார் அவரை மறைத்து வைத்துக்கொண்டு அனுப்பாமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.