திண்டுக்கல்: பழனியை அடுத்த பெருமாள்புதூரில் வசித்து வந்தவர் விவசாயி கருப்புசாமி (45). இவர் நேற்றிரவு (அக்.13) பெருமாள்புதூரிலுள்ள அவரது வீட்டின் முன்பு உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கருப்புசாமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கருப்புசாமி குடித்துவிட்டு அவ்வப்போது மனைவி, குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தது தெரியவந்தது. மேலும் கருப்புச்சாமி வேறு சிலபெண்களுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தெரிகிறது.
வாக்குவாதம்