திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சாமி தரிசனம் செய்தார். மேலும் நெடுஞ்சான்கிடையாக விழுந்தும் முருகனை வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தந்தை விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி அவர் பூரணநலம் பெற வேண்டும் என்றும் பழனி முருகனை வேண்டி தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக பங்கேற்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது என பதிலளித்துள்ளார்.