தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2020, 3:44 PM IST

ETV Bharat / state

கொடைக்கானலில் அரசுப்பள்ளிக்கு தீவைப்பு!

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்குச் சிலர் தீவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளிக்கு தீ வைப்பு
அரசுப் பள்ளிக்கு தீ வைப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது. அப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (அக். 09) நள்ளிரவு பள்ளி வகுப்பறைக்குள் சிலர் தீவைத்துள்ளனர். பின்னர் தீவைக்கப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். அவர்களால் தீயை அணைக்க முடியாததால், தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

அரசுப் பள்ளிக்குத் தீவைப்பு

அந்தத் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தில் மேசைகள், நாற்காலிகள், பீரோ, புத்தங்கங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. மேலும் காவல் துறையினர் தீவைத்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:பைக்கை கொளுத்திய இரண்டு பெண்கள் யார்? போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details