தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - two men arrested for selling ganja in dindigul

திண்டுக்கல்: கொடைக்கானல் ஏழு ரோடு சந்திப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் இருவரை கைது செய்தனர்.

two-men-arrested-for-selling-ganja-in-dindigul
two-men-arrested-for-selling-ganja-in-dindigul

By

Published : Aug 25, 2020, 7:28 AM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய நகர்ப் பகுதியான ஏழு ரோடு சந்திப்புப் பகுதியில் கஞ்சா விற்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சுரேஷ் நாகராஜ் என்ற பாண்ட்ஸ் (25) என்பவரை சோதனை செய்யும்போது, அவர் தலையில் அணிந்திருந்த குல்லாவில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

இதேபோன்று கலையரங்கம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது பரமசிவம் (52) என்பவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததைக் கண்ட காவல் துறையினர், அவரிடமிருந்தும் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இதுபோன்று கஞ்சா விற்பனையில் வேறு ஏதும் கும்பல் செயல்படுகிறதா என்பது குறித்தும் இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க... பல கோடி மதிப்பிலான 25 கிலோ ’செரஸ்’ வகை கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details