திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியைச் சேர்ந்த அலமேலு, சத்திரப்பட்டியைச் சேர்ந்த விஜயா ஆகியோர் நூற்பாலை வேலைக்காக சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து சேலம் நோக்கி ஓட்டுநர் முனிஸ்குமார் என்பவர் லாரியை ஓட்டிவந்தார்.
திடீரென தூக்க கலக்கத்தின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நடந்து சென்றுகொண்டிருந்த இரு பெண்கள் மீதும் மோதியது. இதில் அலமேலு சம்பவ இடத்திலேயே பலியாகினார். பலத்த காயமடைந்த விஜயா மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.