திண்டுக்கல்:பொன்மாந்துறை புதுப்பட்டியை சார்ந்த ராசு என்ற இருளப்பன் (40). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆன நிலையில் 2வது மகள் 12 ஆம் வகுப்பும், ஒரு மகன் தொழிற் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தும் வருகிறார். இவர் பொன்மாந்துறை புதுப்பட்டியில் புதிதாக வீடு விலைக்கு வாங்கி அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 07) இருளப்பன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மதியம் உணவு அருந்திவிட்டு கணவன் மனைவி இரண்டு பேரும் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 6 பேர் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த இருளப்பனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இருளப்பன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நிலம் வாங்கியது தொடர்பாக இருளப்பனுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக இந்த கொலை நடந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.