தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனா வைரஸ் தாக்கம்- வெறிச்சோடிய கொடைக்கானல்! - tourist count reduced on kodaikanal due to corona

திண்டுக்கல்: கொரோனா வைர‌ஸ் அச்சத்தால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்ததால் சிறு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

By

Published : Mar 13, 2020, 10:02 PM IST

உலகம் முழுவ‌தும் கொரோனா வைர‌ஸ் பெரும் அச்ச‌த்தை ஏற்ப‌டுத்தி உள்ள‌து. இந்த‌ வைர‌ஸினால் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட உயிரிழ‌ப்பு காரணமாக தற்போது நாடு முழுவ‌தும் பெரும் க‌ட்டுப்பாடு விதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

களையிழந்த கொடைக்கானல்

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமான வெள்ளி அருவி, ஏரிசாலை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்கள் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்து காணப்படுவதால் சிறு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். கொடைக்கானலில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருவள்ளூரில் ஒரு ரூபாய் பிரியாணி - அலைமோதிய மக்கள் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details