தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளு குளு கொடைக்கானல்... தடுப்பூசி போடவில்லையென்றால் நோ என்ட்ரி - dindigul district news in tamil

தடுப்பூசி போடாதவர்கள் கொடைக்கானலுக்கு உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

tourism-stopped-in-kodaikanal-for-vaccination-camp
குளு குளு கொடைக்கானல்..தடுப்பூசி போடவில்லையென்றால் நோ என்ட்ரி

By

Published : Sep 19, 2021, 2:07 PM IST

திண்டுக்கல்:தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்றும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.

மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்துகின்றனர். புதிய சாதனையாக தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தடுப்பூசி போடாதவர்களுக்கு கொடைக்கானலுக்குள் அனுமதியில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை உரிய அலுவலர்களிடம் காண்பித்தபிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:மெகா தடுப்பூசி முகாம் - இலக்கை கடந்து சாதனை

ABOUT THE AUTHOR

...view details