தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 24, 2019, 10:40 PM IST

ETV Bharat / state

மனைவியுடன் தகாத உறவு - தலையை துண்டித்த கணவன்!

திண்டுக்கல் :பழனி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவரை மறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் வெட்டி கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமர் (45). ராமரின் மனைவி இறந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராமர் இன்று காலை பாப்பம்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் ராமரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமரின் கழுத்தை வெட்டினார்.

ராமர் வெட்டி கொலை

அரிவாளால் வெட்டியதில் தலை துண்டான நிலையில் ராமர் உயிரிழந்தார். மேலும், ராமரை கொலை செய்த தண்டபாணி தலைமறைவானார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி தாலுகா போலீசார் ராமரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட ராமர், தண்டபாணி மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது இதனால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலையாளி தண்டபாணியை பிடித்து விசாரித்தால் உண்மை காரணம் என்ன என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, ஊருக்கு நடுவில் மக்கள் நடமாடும் பகுதியில் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details