தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 3, 2020, 10:52 PM IST

ETV Bharat / state

மலைப் பகுதியில் கஞ்சா பயிரிட்ட 3 பேர் கைது!

திண்டுக்கல்: நத்தம் அருகே மலைப் பகுதியில் கஞ்சா செடி வளர்த்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

மலை பகுதியில் கஞ்சா பயிரிட்ட 3 பேர் கைது!
Three persons arrested for cannabis plantation

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகாவிற்குட்பட்ட குட்டுப்பட்டி பகுதியிலுள்ள பெரியமலையனூர் (கரத்தமலை) மலைப்பகுதியில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக தனிப்படை பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது‌.

இதனடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து சோதனை செய்து வருகின்றனர். இந்தச் சோதனையில் ஒரு வீட்டின் பின்புறத்தில் பயிர்களின் இடையே ஊடுபயிராக கஞ்சா செடி பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான தனிப்படை பிரிவு காவல்துறையினர், அங்கிருந்த 223 கஞ்சா செடிகளை அகற்றி நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், பயிரிட்ட பெரியமலையூரைச் சேர்ந்த ராஜேந்திரன்(48), வெள்ளத்துரை(40), நாச்சான்(70) ஆகிய 3 பேரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details