தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒட்டன்சத்திரத்தில் பூக்கள் ஏற்றிச் சென்ற மினிவேன் மோதிய விபத்தில் பெண் உட்பட மூவர் பலி - collision

ஒட்டன்சத்திரம் அருகே கோவைக்கு பூக்கள் ஏற்றிச்சென்ற மினிவேன் மோதிய விபத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த பெண் உட்பட மூவர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து அம்பிளிக்கை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஒட்டன்சத்திரத்தில் பூக்கள் ஏற்றிச் சென்ற மினிவேன் மோதிய விபத்தில் பெண் உட்பட மூவர் பலி
ஒட்டன்சத்திரத்தில் பூக்கள் ஏற்றிச் சென்ற மினிவேன் மோதிய விபத்தில் பெண் உட்பட மூவர் பலி

By

Published : May 20, 2022, 10:15 PM IST

திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தங்கச்சியம்மாபட்டி வாய்க்கால் பாலம் அருகே நிலக்கோட்டையில் இருந்து சதீஸ் என்பவர் பூக்கள் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற மினிவேன், சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

பின்னர் நிலைதடுமாறி சாலையின் எதிரே சென்று மற்றொரு இருசக்கர வாகனம் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தால் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒத்தையூரைச் சேர்ந்த கருப்புச்சாமி மற்றும் ஹவுசிங்போர்டைச் சேர்ந்த சந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரகலா ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அம்பிளிக்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:திருக்கோவிலூர் மாணவர் கொலை வழக்கு - கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது

ABOUT THE AUTHOR

...view details