தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 31, 2020, 7:26 AM IST

ETV Bharat / state

செல்போன் கடையில் ஐஸ்கிரீமை சுவைத்தவாறு கூலாகத் திருடிய திருடர்கள்!

திண்டுக்கல்: செல்போன் கடையை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிய திருடர்கள் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த குளு குளு ஐஸ்கிரீமை அள்ளி அள்ளி தின்றதோடு, வேண்டுமளவுக்கு எடுத்தும் சென்றுள்ளனர்.

theft
theft

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர் சிவமுத்து. இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே செல்போன் பழுதுசெய்வது, செல்போன் உபகரணங்கள், ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் (ஆக.29) இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கு என்பதால் நேற்று (ஆக. 30) காலை கடையைத் திறக்க அவர் வரவில்லை‌. ஆனால், செல்போன் கடை உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் சிவமுத்துவுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவர் வந்து கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த நகலெடுக்கும் இயந்திரம் (ஜெராக்ஸ் மிஷின்), செல்போன்கள், மடிக்கணினி, ரொக்கப்பணம் 12 ஆயிரத்து 500 உள்பட 60 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடுபோனது தெரிய வந்தது.

கூல் திருடர்கள்!

மேலும், திருடவந்த திருடர்கள் கடையில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீமை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு வேண்டும் என்ற அளவுக்கு அள்ளியும் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிவமுத்து அளித்தப் புகாரின்பேரில் நிலக்கோட்டை காவல் துறையினர் விரைந்துசென்று திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து செல்போன் கடைக்கு அருகேயுள்ள சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வுசெய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தடயவியல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையும் நடைபெற்றது. இதனிடையே செல்போன் கடையில் திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ’ஆட்டோமேட்டிக் ஆம்புலன்ஸ் சர்வீஸ்’

ABOUT THE AUTHOR

...view details