தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 21, 2020, 1:27 PM IST

ETV Bharat / state

வெம்பா பனியால் பருத்தி சாகுபடி பாதிப்பு

திண்டுக்கல்: வெம்பா பனியால் பருத்திச் செடி முழுவதும் கருகி காய் பிஞ்சிலேயே வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

the impact of cotton farming on snowfall
the impact of cotton farming on snowfall

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சத்திரப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, ராமபட்டிணம் புதூர், கோம்பைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மானாவாரியாக பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்ட பருத்தி தற்போது கடுமையான வெம்பா பனியால் தாக்கப்பட்டுள்ளது. இதனால் பருத்திச் செடி முழுவதும் கருகி, பருத்திப் பிஞ்சுகள் காய்ந்து வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பருத்தி சாகுபடி பாதிப்பு

ஏற்கனவே, மக்காச்சோளப் பயிர்கள் அமெரிக்கன் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மானாவாரி பருத்தி சாகுபடியிலும் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்கவுள்ளனர். எனவே விவசாயிகள் பருத்தியைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அமமுக உறுப்பினரின், சாதி பெயரைக் கூறித் தாக்கிய திமுக பிரமுகர்!

ABOUT THE AUTHOR

...view details