திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பாச்சலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அவருடைய சகோதரி மதிய உணவு வேளையின்போது அவரைக் காணவில்லை எனத் தேடியுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் மாணவியை ஆசிரியர்கள் தேடியுள்ளனர். இந்நிலையில், பள்ளியின் சமையலறை அருகில் மாணவி உடல் கருகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் கொடைக்கானல் தாண்டிக்குடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், உடனே மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் மாணவி உயிரிழந்தார்.