தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் முக்கியப் பொறுப்புகள் அனைத்திலும் பெண்கள்: இப்போது எஸ்பியும் பெண்! - திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரவளி பிரியா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ravali-priya-takes-charge
ravali-priya-takes-charge

By

Published : Jul 12, 2020, 3:30 PM IST

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சக்திவேல், சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சென்னை மாதவரம் துணை காவல் ஆணையராக பணிபுரிந்துவந்த ரவளி பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி இன்று ரவளி பிரியா திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் பெண் காவல் கண்காணிப்பாளராவார்.

மேலும் திண்டுக்கல்லில் ஆட்சியர் மு.விஜயலட்சுமி, முதன்மை நீதிபதி ஜமுனா, மாவட்ட வன அலுவலர் வித்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கோட்டாட்சியர் உஷா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா என அனைத்து துறைகளும் பெண்கள் தலைமையின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருச்சி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details