திண்டுக்கல்: திருக்கார்த்திகை நாளன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இதற்காகவே நத்தம் அருகே நொச்சி ஓடைப்பட்டியில் வருடந்தோறும் மண்ணால் ஆன விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
இவைகள் திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கு லட்சுமி விளக்கு, பிள்ளையார் விளக்கு, மேஜிக் விளக்கு, அன்னம் விளக்கு, மயில் விளக்கு, குத்து விளக்கு, அடுக்கு விளக்கு உள்ளிட்ட 50 வகையான மாடல்களில் விதவிதமான விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த விளக்குகள் ஒரு ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா