தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 1, 2022, 12:36 PM IST

ETV Bharat / state

தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை

வேடசந்தூர் அருகே தோட்டத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாயும், மகனையும் கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை
தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா ஏரியோட்டை அடுத்த குருக்களையன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (40). இவர் அதே பகுதியிலுள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்துவருகிறார். இவர் நேற்றிரவு (மார்ச் 31) தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு தோட்டத்து வீட்டில் தனது தாய் சௌந்தரம்மாள் (60) என்பவருடன் தங்கினார்.

இந்நிலையில், இன்று (ஏப். 01) காலை அவரது தோட்டத்து வீட்டுக்கு பால் கறப்பதற்காக பால்காரர் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கட்டிலில் தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பால்காரர் இது குறித்து எரியோடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன், வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோரது தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு இறந்து கிடந்த இருவரது உடல்களையும் மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலை குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:எஸ்ஐ தொல்லை கொடுக்கிறார்... தற்கொலைக்கு முயன்ற மூவரிடம் போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details