திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலின் தலைமை மருத்துவமனையாக அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நாள்தோறும் இங்கு மலைக்கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழி திறந்தவெளி கழிப்பிடமாகவும், குப்பைக்கூளமாகவும் மாறி வருகிறது. குறிப்பாக இரவு வேளைகளில் அரசு மருத்துவமனை வளாகம், மதுப்பிரியர்களின் கூடாரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. தவிர, மருத்துவமனை வளாகத்தில் செல்லும் கழுவுநீர் கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.