தமிழ்நாடு

tamil nadu

கோழி கழிவுகளை கொட்ட வந்த டிப்பர் லாரி சிறைப்பிடிப்பு

நத்தம் அருகே பாப்பாப்பட்டியில் குப்பை, கோழி கழிவுகளை கொட்ட வந்த டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

By

Published : Jan 8, 2022, 6:34 AM IST

Published : Jan 8, 2022, 6:34 AM IST

People capture tipper truck
People capture tipper truck

திண்டுக்கல்: நத்தம் அருகே பாப்பாப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் கொட்டுவதற்காக நத்தம் பேரூராட்சி பகுதியிலிருந்து குப்பை, கோழி கழிவுகளுடன் டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது.

இந்தக் குப்பையை கொட்டும் போது அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழிவுடன் வந்த லாரியை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோழி கழிவுகளை கொட்ட வந்த டிப்பர் லாரி

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்களிடம் இனி கழிவுகள் இங்கு கொட்டப்படாது எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'அம்மா என்னை மன்னித்துவிடு' - மூக்கனேரியில் இளம்பெண் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details