தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வானத்தில் வட்டமிட்ட போர் விமானங்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்! - கொடைக்கானல் பகுதி மக்கள்

திண்டுக்கல்: கொடைக்கானல் நகர் பகுதியில் 10 போர் விமானங்கள் வட்டமிட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வானத்தில் பறந்த விமானங்கள்
வானத்தில் பறந்த விமானங்கள்

By

Published : Feb 24, 2021, 6:59 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (பிப்.24) ம‌திய‌ம் வானத்தில் அதிக சத்தம் ஏற்படுவதை அடுத்து பொதுமக்கள் வானத்தை பார்த்தனர். அப்போது, பத்து விமானங்கள் ஒன்று சேர்ந்து வட்டமிட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், வானத்தில் பறந்தது போர் விமானமாக இருக்கக்கூடும் என எண்ணினர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் 10 போர் விமானங்கள் பறப்பது என்பது அரிதான ஒன்றாகும். இது குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இல்லாததால் பறந்தது போர்விமானங்களா அல்லது வேறு ஏதும் பயிற்சி விமானமா என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

தொட‌ர்ந்து கொடைக்கானலில் பறந்த 10 போர் விமானங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது டிப்போ பகுதியைச் சேர்ந்த அரிமா பேகம் என்ற பெண் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து.

வானத்தில் பறந்த விமானங்கள்

இதனையடுத்து அவரை மீட்ட அப்பகுதி மக்கள் கொடைக்கான‌ல் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சடலம் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details