தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு:சுபாஷ் பண்ணையார் நேரில் ஆஜர்! - திண்டுக்கல் நீதிமன்றம்

திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 14 பேர் நேரில் ஆஜராகினர்.

திண்டுக்கல் நீதிமன்றம்

By

Published : Nov 6, 2019, 10:20 AM IST

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன். கடந்த 2012ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் 18 குற்றவாளிகளில் நான்கு பேர் தற்போது உயிரோடு இல்லை.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் சுபாஷ்பண்ணையார் உள்ளிட்ட 14 பேர் நேரில் ஆஜர்

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 14 பேர் சிறப்பு எஸ்.சி/எஸ்.டி. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் வரும் 19-ஆம் தேதியன்று மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

இதனிடையே சுபாஷ் பண்ணையார் வருகையையொட்டி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிக்க: பாலியல் குற்றவாளிகளின் விடுதலை எதிர்த்து போராட்டம்: பொதுமக்கள் அவதி

ABOUT THE AUTHOR

...view details