தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2019, 11:13 PM IST

ETV Bharat / state

'நவபாஷாண சிலையை கடத்த சதி திட்டம்' - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

திண்டுக்கல்: பழனி கோயிலில் உள்ள பழமையான நவபாஷாண சிலையை கடத்தும் நோக்கத்தில்தான் ஐம்பொன் சிலை செய்யப்பட்டது எனும் அதிர்ச்சித் தகவலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.

டிஎஸ்பி ஜெயராம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோயில் பவர் சித்தர் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ள நவபாஷாண முருகன் சிலையை கடத்தும் நோக்கில் மிகப் பெரிய சதி நடந்தது உறுதியாகி உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழனியில் இரண்டு நாட்களாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயராம் கூறுகையில், "ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான போகர் சித்தரால் செய்யப்பட்ட நவபாஷாண சிலையின் உரிமையும் அதிகாரமும் எந்த நபருக்கும் எந்த அரசுக்கும், சொந்தம் இல்லை. இந்தத் தன்மையை கண்டறிய சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. நவபாஷாண சிலையை மாற்ற முதன்முதலில் அடிகோலியவர் பிரதான குற்றவாளி ஸ்தபதி முத்தையா என்று புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மிகப்பெரிய ரகசிய திட்டத்தை முகத்தை மறைத்து இந்த சதியை செயல்படுத்துவதற்கு பின்னின்று இயக்கியவர்கள் யார் யார் என்பது விரைவில் கண்டறியப்படும்" என்று தெரிவித்தார். அப்போது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் அமுதா தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டிஎஸ்பி ஜெயராம்

ABOUT THE AUTHOR

...view details