தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நத்தம் அருகே ஆண் சடலம் மீட்பு- காவல் துறை விசாரணை - திண்டுக்கல்

திண்டுக்கல் : நத்தம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் முட்புதரில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

body

By

Published : May 12, 2019, 8:35 AM IST

நத்தம் அருகே சுண்டைக்காய்பட்டி விலக்குப்பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக நத்தம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் புதர் பகுதியில் இருந்த சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

நத்தம் அருகே ஆண் சடலம் மீட்பு
இது குறித்து, பூதகுடி கிராம நிர்வாக அலுவலர் சங்கிலி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இது கொலையா அல்லது இயற்கை மரணமா ஆகிய கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details