திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உள்ள செயின்ட்மேரிஸ் சாலையில், பாதரச தொழிற்சாலை கடந்த 1982ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கடந்த 2001ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை மூடப்பட்டது.
இதனையடுத்து, ஆலையில் கலந்துள்ள பாதரச கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும் அங்கு பணிபுரிந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதனடிப்படையில் முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்டோருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், அங்கு பணிபுரிந்த பலருக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது