பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து 11ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்கள் தற்போது தங்களது பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு தேர்விற்கான நுழைவுச் சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச்சீட்டுடன் முகக்கவசங்கள் வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.