தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 4, 2021, 3:12 PM IST

ETV Bharat / state

சிலிண்டருக்கு நாமம் - விலை உயர்வைக் கண்டித்து கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்!

தொடர்ந்துவரும் விலை உயர்வைக் கண்டித்து, நத்தத்தில் சிலிண்டருக்கு நாமம் இட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

திண்டுக்கல்: நத்தம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, நாமமிட்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் - டீசல், சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும், கரோனா கால நிவாரணத் தொகையாக ரூ.7500 வழங்க வேண்டும், சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தைக் குறைக்காமல் ரூபாய் 250 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி, தாலுகா குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, பொன்னுசாமி, தவநூதன் விஜயவீரன் கிளை நிர்வாகிகள் குழந்தைவேல், பிச்சன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details