திண்டுக்கல் மாவட்டம் நேருஜி நகர் ஏடிஎம் இயந்திரத்தில் அமல் சதீஷ் என்பவர் தனது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 20,000 ரூபாய் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் திரும்பி சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து அதே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த லக்கீஸ்வரன் என்பவர் ஏடிஎம் இயந்திரத்தில் 20,000 ரூபாய் தவறவிட்டு சென்றிருப்பதை கவனித்துள்ளார். உடனடியாக அந்தப் பணத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியாவிடம் ஒப்படைத்தார்.