தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் விவகாரம் - காதலன் கொலை - காதலியின் தந்தை கைது - Murder of a young man who fell in love with a young woman

ஆத்தூர் அருகே காதல் பிரச்சனையில் காதலன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காதலியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

காதல் விவகாரத்தால் இளைஞர் படுகொலை- பெண்ணின் தந்தை கைது
காதல் விவகாரத்தால் இளைஞர் படுகொலை- பெண்ணின் தந்தை கைது

By

Published : Jul 12, 2022, 6:53 PM IST

திண்டுக்கல்: சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அழகுவிஜய் (24). கொத்தனார் வேலை செய்து வந்தார். . இதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், இவரது மகன் அஜித்(26). கூலி வேலை செய்து வருகிறார். அஜித்தின் தங்கை துர்கா (17) கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் அழகுவிஜய் துர்காவை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் துர்கா வீட்டுக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அவ்வப்போது தகராறும் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு இருவரும் சேடபட்டியில் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற துர்காவின் அண்ணன் அஜித், தங்கையை கண்டித்ததுடன் அவர் கண் முன்பே அழகுவிஜயை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அழகுவிஜய் உயிரிழந்தார். சடலத்தை சேடபட்டி அருகே உள்ள தோட்டத்தில் மறைத்து வைத்துவிட்டு, தந்தை தமிழ்செல்வனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு , இருவரும் சேர்ந்து ஒரு சாக்கு பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து ஆத்தூர் காமராஜர் அணையின் கரை ஓரத்தில் புதருக்குள் தூக்கி வீசிவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்.

காலையில் அஜித் வீட்டின் அருகில் இரத்தக்கரை இருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து செம்பட்டி போலீசார் தமிழ்செல்வனிடம விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த தகவலின் பேரில் சடலத்தை கைப்பற்றிய போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சாக்கு மூட்டையில் பிணம் கிடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், டி.எஸ்.பி., முருகேசன் மற்றும் செம்பட்டி ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதுதொடர்பாக துர்காவின் தந்தை தமிழ்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:செல்போன் டவர் மீது ஏறி தலை கீழாக நின்றபடி இளைஞர் நூதன போராட்டம்!!

ABOUT THE AUTHOR

...view details