தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது பாட்டில்களை பதுக்கி வைக்கும் அலுவலர்கள்! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: அரசு டாஸ்மாக் கடைகளை துளையிட்டு மது பாட்டில்கள் திருடும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்களையும் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றி வைத்துள்ளனர்.

மதுபாட்டில்களை பதுக்கி வைக்கும் அலுவலர்கள்
மதுபாட்டில்களை பதுக்கி வைக்கும் அலுவலர்கள்

By

Published : Apr 10, 2020, 10:33 AM IST

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால், தள்ளாடி வந்த மது பிரியர்கள் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து அதிலிருந்து மது பாட்டில்களை திருடிச் செல்கின்றனர்.

அந்த வரிசையில் திண்டுக்கல் பகுதியில் தொடர்ந்து மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் சாத்திரம் தெருவில் உள்ள மதுபானக் கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

மதுபாட்டில்களை அகற்றும் அலுவலர்கள்

இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு வாணிப கழகம் சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 154 அரசு டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபான பாட்டில்களையும் காவல் துறையினரின் பாதுகாப்போடு லாரிகள் மூலம் எடுத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் துளையிட்டு மது பாட்டில்கள் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details