திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சுப்புலட்சுமியும், அவரது கணவர் கணேசனும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வடமதுரையில் உள்ள அம்பலகாரன்பட்டி கிராமத்தில் குடிபெயர்ந்தனர்.
அப்போது அவர்கள் இல்லம் அருகில் வசித்த ஓய்வு பெற்ற அஞ்சல்துறை அலுவலர் பழனிசாமி என்பவர் உறவினர் போல் பழகி உள்ளார். பின்பு பணியின் காரணமாக ஒட்டன்சத்திரத்துக்குக் குடிபெயர்ந்த சுப்புலட்சுமி, தான் இடம் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி பழனிசாமியிடம் கைமாறாக கொடுத்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு அவரிடம் சென்று, கைமாறாக கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால் பணத்தை பழனிசாமி திருப்பித் தர மறுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் கொடுத்துள்ளார். மீண்டும் பழனிசாமியைத் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளார். ஆனால், பணத்தைத் திருப்பித் தர மறுத்த பழனிசாமி, குடும்பத்துடன் வந்து சுப்புலட்சுமியை மிரட்டி சென்றுள்ளார்.