திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலை கொல்லப்பட்டி அருகே வெளிநாட்டைச் சேர்ந்த தம்பதி ஆட்டோவில் சென்றபோது என்ஜினில் பழுது ஏற்பட்டு வழியில் நின்றது. அப்போது, அவர்களைப் பார்த்த அப்பகுதி மக்கள், இவர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தில் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை செய்தனர். அதில், அவர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொடைக்கானல் வந்து தங்கியிருந்ததும் அங்கிருந்து ஆட்டோ ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கி அதன் மூலம் சென்னை செல்லயிருந்ததும் தெரியவந்தது.