தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை - dindugul latest news

திண்டுக்கல்: கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உழவர் சந்தை
உழவர் சந்தை

By

Published : Oct 5, 2020, 1:22 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆனந்தகிரி நான்காவது தெருவில் நகராட்சிக்கு சொந்தமான உழவர் சந்தை அமைந்துள்ளது. கொடைக்கானலில் விளைவிக்கப்படும் காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்வது வழக்கம்.

ஆனால், இந்த உழவர் சந்தை கட்டிமுடிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பைகளாக காட்சியளிக்கிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், குடிகாரர்களின் வசிப்பிடமாகவும் அது மாறி வருகிறது. கரோனா அச்சுறுத்தலின் காரணமாக வார சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், உழவர் சந்தையை திறந்து மக்கள் பயன்பெறச் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details