திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் மாரிமுத்து. கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக பள்ளி மாணாக்கர்கள் செல்போன், டிவிகளைப் பார்த்து பொழுதைக் களித்து வருகின்றனர். இதற்கு மாற்றாக மாணவர் மாரிமுத்து, ஓவியங்கள் வரைந்து தன்னை மெருகேற்றிக்கொண்டு வருகிறார்.
தன் சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட மாரிமுத்து கரோனா ஊரடங்கில் படிப்பைத் தொடர்ந்து பயனுள்ளதாக இருக்க நினைத்த தினசரி ஓவியங்களை வரைந்து வருகிறார்.
ஊரடங்கைப் பயனுள்ளதாகப் பயன்படுத்தும் மாணவர்: