தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் திடீர் தீ விபத்து: வீடுகள் எரிந்து நாசம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் குடிசைப் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு எட்டுக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Mar 6, 2020, 2:17 PM IST

கொடைக்கானல் குடிசை தீ விபத்து கொடைக்கானல் தீ விபத்து தீ விபத்து Kodaikanal Hut Fire Accident Kodaikanal Fire Accident Fire Accident
Kodaikanal Hut Fire Accident

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள இந்திராநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சண்முகதாய் என்பவரின் வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்துள்ளது.

இதன் காரணமாக, அருகிலிருந்த குடிசை வீடுகள் மீது தீ மளமளவென பரவி பற்றியெரிந்தது. இதில், எட்டுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்து அனைத்து பொருள்களும் நாசமாகின. இதைத் தொடர்ந்து, தீப்பற்றி குடிசை வீடுகள் எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தின்போது வீடுகளில் ஆட்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் த‌விர்க்க‌ப்பட்ட‌து.

கொடைக்கானலில் தீ விபத்து

மேலும் திடீரென உள்ள குடிசை வீடுகளில் தீப்பற்றியதால் அப்பகுதி மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்! பெற்றோரின் கொலைவெறி!

ABOUT THE AUTHOR

...view details