தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் கேரட் விலை விழ்ச்சி - விவசாயிகள் கவலை! - கொடைக்கானல் கேரட் விலை குறைந்தது

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைக்கிராமங்களில் விளையும் கேரட் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Kodaikanal Carrot

By

Published : Nov 24, 2019, 4:45 AM IST

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ளது கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும் கொடைக்கானலில் மேல்மலை பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் கேரட் பயிரிடப்பட்டு வருகிறது.

கேரட் விதை விதைத்து 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். கடந்த மூன்று மாதங்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கேரட் விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக மலைகிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, வாழைக்காட்டு ஓடை, அடிசரை உள்ளிட்ட மலை கிராமங்களில் கேரட் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன.

கேரட் விலை விழ்ச்சி

இந்நிலையில், ஊட்டி, மேட்டுப்பாளையம், மாலூர் பகுதிகளில் விளைவிக்கப்படும் கேரட் வரத்து மதுரை, திருச்சி, ஒட்டன் சத்திரம் போன்ற வெளியூர் சந்தைகளில் அதிகரித்து காணப்படுவதால் கொடைக்கானல் கேரட்டிற்கு விலை குறைந்துள்ளது.

இதனால் கிலோ ஒன்றிற்கு 10 முதல் 12 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைப்பதாக மலை கிராம விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் விளைச்சல் அதிகரித்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும் அதற்கான பலன் தங்களுக்கு கிடைக்கவில்லை என்கின்றனர்.

இதையும் படிங்க:

கேரட் கிலோ 40-60ரூபாய் வரை விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details