கொடைக்கானலில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்தத் தடைசெய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்று ஏற்பாடாக கொடைக்கானல் நகர்ப் பகுதியில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் கொடைக்கானல் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், கொடைக்கானல் நகராட்சிப் படகு இல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே செயல்படாமல் காட்சிப் பொருளாக மாறியது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.