தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒட்டன்சத்திரத்தில் புவி ஆராய்ச்சி செய்யும் காரைக்குடி அழகப்பா மாணவர்கள் ! - சந்திரயான் 2 விண்கலத்தின் சோதனை ஓட்ட ஆய்வு

திண்டுக்கல்: காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் புவி அமைப்பியல் துறையில் முதுகலை பயிலும் மாணவர்கள், புவி ஆராய்ச்சி, மாதிரி தயாரித்தல் ஆகியவற்றிற்கு ஒட்டன்சத்திரம் பகுதிகளில் களப்பணி செய்து வருகின்றனர்.

arts college student earth research at Oddanchatram

By

Published : Sep 27, 2019, 5:21 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக சார்னகைட், கோண்டலைட், பைராக்சின் கிரானுலைட், அனார்த்தசைட், பெக்மடைப் ஆகிய பாறைகள் அதிகமாக காணப்படுகின்றன. சுமார் 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்பாறைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஒட்டன்சத்திரம், சித்தம்புண்டி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தப் பாறைகள் கிட்டத்தட்ட நிலவில் உள்ள பாறைகள் போன்று இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆகையால் சித்தம்புண்டி பகுதியில் இருந்து பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மண் எடுத்து சந்திரயான் 2 விண்கலத்தின் சோதனை ஓட்ட ஆய்வுக்காக அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக இப்பாறையின் வேதியல் மூலக்கூறு பூமியின் இரண்டாம் அடுக்கான மேண்டிலில்தான் கிடைக்கும். ஆனால் இப்பகுதிகளில் பூமியின் மையப்பகுதியின் பிளவுகளின் மூலம் மேல்பகுதியிலேயே கிடைக்கிறது.

களப்பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

இந்நிலையில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் புவி அமைப்பியல் துறையில் முதுகலை பயிலும் மாணவர்கள், தங்கள் பாடத்திட்டத்திற்கு ஏற்ப புவி ஆராய்ச்சி, மாதிரி தயாரித்தல் ஆகியவற்றிற்காக ஒட்டன்சத்திரம் பகுதிகளில் களப்பணி செய்துவருகின்றனர். இந்தக் களப்பணியின் மூலம் மாணவ மாணவிகளுக்கு தென் இந்தியாவின் கிராவலைட் பிரதேசம் எப்படி உருவானது என்பதை அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. களப்பணியில் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இந்தி 'சந்திரமுகி'யில் நடிக்க உள்ள 'தோனி' பட நடிகை!

ABOUT THE AUTHOR

...view details