தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2019, 6:14 AM IST

ETV Bharat / state

சர்தேச சிலம்ப போட்டியில் சாதித்த ஒட்டன்சத்திரம் மாணவி

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிலம்பத்தில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

பிரதீபா

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் பாண்டி - பத்மாவதி தம்பதி. இவர்களின் மகள் பிரதீபா ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து சிலம்பம் கற்று வந்தார். அப்போதுமுதல் சேலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து பல பதக்கங்களை பெற்றுள்ளார்.

தற்போது பிரதீபா உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் 18 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பெற்று தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி பிரதீபா சர்வதேச அளவில் பாரம்பரியமிக்க விளையாட்டான சிலம்பத்தில் தங்கபதக்கம் பெற்று வந்தது இப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலம்ப போட்டியில் சாதித்த ஒட்டசத்திரம் மாணவி பேட்டி

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், விடாமுயற்சியுடன் கடின பயிற்சி எடுத்து உலக அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொண்டு தங்க பதங்கம் பெறுவது தான் கனவு என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:துப்பாக்கிச் சுடுதலில் அட்டகாசம் செய்த 'தல' அஜித்

ABOUT THE AUTHOR

...view details