திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் லக்கையன்கோட்டை மலைப் பகுதி அருகே ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விளைந்திருக்கும் பயிர்களை உண்பதற்காக இரண்டு காட்டுயானைகள் வந்துள்ளன.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் வித்தியா தலைமையிலான வன ஊழியர்கள் 20 பேர் இரண்டு காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்தனர்.