தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அரசை கண்டித்து நெடுஞ்சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..! - கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: சாலை பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

privatisation

By

Published : Nov 7, 2019, 11:33 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, சாலை பராமரிப்பு பணிகளின் ஒப்புதல்களை மாநில அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனைக் கண்டித்து அம்மாவட்டத்திலுள்ள சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை ஊழியர் சங்கம், ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அரசை கண்டித்து நெடுஞ்சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மேலும் இது பற்றி பேசிய சாலை பணியாளர்கள், சாலை பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதைவிட அரசே ஏற்று நடத்த வேண்டும். ஏனெனில் தனியார் தலையிட்டால் நெடுஞ்சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களின் வாழ்வதாரம் பெரியளவில் பாதிக்கப்படும் என கூறினர்.

இதையும் படிங்க: தருமபுரியில் வரவேற்பை பெற்றுள்ள தந்தூரி டீ - மாற்றுத்திறனாளியின் சாதனை

ABOUT THE AUTHOR

...view details